Published : 19 Apr 2023 10:44 AM
Last Updated : 19 Apr 2023 10:44 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 104 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (புதன்கிழமை) வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 79 புள்ளிகள் சரிவடைந்து 59,647 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 21 புள்ளிகள் சரிந்து 17,638 ஆக இருந்தது.

இரண்டு நாட்கள் தொடர்ந்து சரிவில் நிறைவடைந்ததன் நீட்சியாக பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை சரிவுடனயே தொடங்கின. காலை 10:16 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 104.73 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 59,622.28 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 35.85 புள்ளிகள் சரிவடைந்து 17624.30 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் பாதகமான குறிப்புகள், நான்காவது காலாண்டு வருவாய் வீழ்ச்சி போன்ற காரணங்களால் முக்கியமான நிறுவனங்கள் விற்பனை எதிர்பார்த்ததை விட மந்தமாக இருந்தன. இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்தன.

தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை டாடா ஸ்டீல், ஆக்ஸிஸ் பேங்க், எல் அண்ட் டி, எம் அண்ட் எம், பவர் கிரிடு கார்ப்பரேஷன், பாரதி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டைட்டன் கம்பெனி, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், டாடா மோட்டரா்ஸ் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. இன்போசிஸ், ஹெச்சிஎல் செக்னாலஜிஸ், ஏசியன் பெயின்ட்ஸ், டெக் மகேந்திரா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், விப்ரோ, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், மாருதி சுசூகி, இன்டஸ்இன்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், நெஸ்ட்லே இந்தியா, என்டிபிசி, ஐடிசி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x