Published : 17 Apr 2023 05:38 PM
Last Updated : 17 Apr 2023 05:38 PM

சென்செக்ஸ் 520 புள்ளிகள் வீழ்ச்சி 

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் திங்கள்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 520 புள்ளிகள் (0.86 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 59,910 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 121 புள்ளிகள் (0.68 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 17,706 ஆக இருந்தது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து லாபத்தில் நிறைவடைந்த பங்குச்சந்தைகளில் திங்கள்கிழமை வர்த்தகம் கடும் சரிவுடன் தொடங்கியது. காலை 10:17 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 813.96 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 59,617.04 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 244.75 புள்ளிகள் சரிவடைந்து 17,583.25 ஆக இருந்தது.

இந்திய பங்குச்சந்தைகளில் இன்றைய வார முதல்நாள் வர்த்தகம் வீழ்ச்சியுடனேயே தொடங்கியது. தகவல்தொழில் நுட்ப பங்குகள் தங்களை மீட்டெடுக்க தவறியது, நிதி பங்குகளின் சரிவு காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை வர்த்தகத்தை வீழ்ச்சியில் நிறைவு செய்தன. இதனால் தொடர்ந்து 9 நாட்கள் நீடித்து வந்த லாப போக்கு இன்று முற்றுப்பெற்றது.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 520.25 புள்ளிகள் சரிவடைந்து 59,910.75 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 121.20 புள்ளிகள் சரிவடைந்து 17,706.80 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை நெஸ்ட்லே இந்தியா, பவர் கிரிடு கார்ப்ரேஷன், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இன்டஸ்இன்ட் பேங்க், கோடாக் மகேந்திர பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், டைட்டன் கம்பெனி, எம் அண்ட் எம், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ பேங்க், மாருதி சுசூகி பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. இன்போசிஸ், டெக் மகேந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், என்டிபிசி, எல் அண்ட் டி, விப்ரோ, ஹெச்டிஎஃப்சி, டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், பாரதி ஏர்டெல், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின்சர்வ், ஆக்ஸிஸ் பேங்க் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x