Published : 05 Apr 2023 11:24 AM
Last Updated : 05 Apr 2023 11:24 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 365 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (புதன்கிழமை) வர்த்தகம் சற்று ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 98 புள்ளிகள் உயர்வடைந்து 59,205 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 26 புள்ளிகள் உயர்ந்து 17,424 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் சற்று ஏற்றத்துடனேயே தொடங்கியது. பின்னர் லாபத்தை நோக்கிச் சென்றது. காலை 10:49 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 365.67 புள்ளிகள் உயர்வடைந்து 59,472.11 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 107.10 புள்ளிகள் உயர்வடைந்து 17,505.15 ஆக இருந்தது.

பணவீக்கம் குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்ட முடிவுகள் குறித்த கவலைகளுக்கு மத்தியில், உலகளாவிய சந்தைகளில் நிலவிய கலவையான சூழல்கள், வங்கிகள், நிதி நிறுவனங்களின் வலுவான காலாண்டு புதுப்பிப்பு நிலவரங்கள் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் புதன்கிழமை வர்த்தகத்தை ஏற்றத்திலேயே தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி, எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐடிசி, டிசிஎஸ், டைட்டன் கம்பெனி, இன்போசிஸ், விப்ரோ,பஜாஜ் ஃபின்சர்வ் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. இன்டஸ்இன்ட பேங்க், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, என்டிபிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஏசியன் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், மாருதி சுசூகி, எம் அண்ட் எம், டாடா ஸ்டீல் பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x