Published : 03 Apr 2023 10:38 AM
Last Updated : 03 Apr 2023 10:38 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 48 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (திங்கள்கிழமை) வர்த்தகம் சற்று ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 95 புள்ளிகள் உயர்வடைந்து 59,087 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 30 புள்ளிகள் உயர்ந்து 17,389 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வார முதல் நாள் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:01 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 48.41 புள்ளிகள் உயர்வடைந்து 59,039.93 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 17.25 புள்ளிகள் உயர்வடைந்து 17,377.00 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் நிலவிய சாதகமான சூழல்கள், மாருதி சுசூகி, பஜாஜ் ட்வின்ஸ், பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல் போன்ற பங்குகளின் உயர்வு காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தை ஏற்றத்துடனேயே தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை மாருதி சுசூகி, என்டிபிசி, எம் அண்ட் எம், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பாரதி ஏர்டெல், அட்ரா டெக் சிமெண்ட்ஸ், டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், எல் அண்ட் டி பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. ஹிந்துஸ்தான் யுனிலீவர், டெக் மகேந்திரா, இன்போசிஸ், டிசிஎஸ், ஏசியன் பெயின்ட்ஸ், சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், நெஸ்ட்லே இந்தியா, ஐசிஐசிஐ பேங்க், ஐடிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x