Published : 27 Mar 2023 10:52 AM
Last Updated : 27 Mar 2023 10:52 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 323 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (திங்கள்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 124 புள்ளிகள் உயர்வடைந்து 57,615 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 42 புள்ளிகள் உயர்ந்து 16,987 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வார முதல் நாள் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:17 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 323.00 புள்ளிகள் உயர்வடைந்து 57,850.10ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி77.65 புள்ளிகள் உயர்வடைந்து 17,022.70 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் நிலவிய கலவையான சூழல்கள் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று வர்த்தகத்தை ஏற்றத்துடனேயே தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், கோடாக் மகேந்திரா பேங்க், டாடா ஸ்டீல் பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன. எம் அண்ட் எம், ஆக்ஸிஸ் பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x