Published : 13 Mar 2023 10:39 AM
Last Updated : 13 Mar 2023 10:39 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 121 புள்ளிகள் உயர்வு 

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (திங்கள்கிழமை) வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாகத் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 44 புள்ளிகள் உயர்வுடன் 59,179 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 19 புள்ளிகள் உயர்வுடன் 17,432 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இந்த வாரத்தின் முதல்நாள் வர்த்தகம் தட்டையாகத் தொடங்கிய போதிலும் விரைவில் ஏற்றத்தை நோக்கி சென்றது. காலை 09:54மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 121.10 புள்ளிகள் உயர்வடைந்து 59,256.23 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 40.65 புள்ளிகள் உயர்வடைந்து 17,453.55 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் கலவையான சூழல்களுக்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை தட்டையாகத் தொடங்கினாலும், விரைவில் லாபத்தை நோக்கி பயணித்தன.

தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை எல் அண்டி டி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்திய ஹெச்டிஎஃப்சி, ஐடிசி, ஏசியன் பெயின்ட்ஸ், விப்ரோ பங்குகள் உயர்வில் இருந்தன. டாடா ஸ்டீல், நெஸ்ட்லே இந்தியா, டைட்டன் கம்பெனி, எம் அண்ட் எம், டாடா மோட்டார்ஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x