Published : 06 Mar 2023 10:39 AM
Last Updated : 06 Mar 2023 10:39 AM

பங்குச்சந்தை |  சென்செக்ஸ் 541 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (திங்கள்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 458 புள்ளிகள் உயர்ந்து 60,277 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி124 புள்ளிகள் உயர்ந்து 17,718 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வார முதல்நாள் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:04 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 541.56 புள்ளிகள் உயர்வடைந்து 60,350.53 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 177.15 புள்ளிகள் உயர்ந்து 17,771.50 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் வலுவான சூழல், ஹெவிவெயிட் பங்குகளான நிதி மற்றும் தகவல் தொடர்பு பங்குகள் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கின. அனைத்து வகை பங்குகளும் உயர்வடைந்திருக்கின்றன.

தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை ஹெச்டிஎஃப்சி, ஏசியன் பெயின்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், எம் அண்ட் எம், விப்ரோ, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், டைட்டடன் கம்பெனி, ஐடிசி, டாடா ஸ்டீஸ், நெஸ்ட்லே இந்தியா பங்குகள் உயர்வில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x