Published : 21 Feb 2023 04:51 AM
Last Updated : 21 Feb 2023 04:51 AM

அதிக ஓய்வூதியம் பெற வழிகாட்டுதலை வெளியிட்டது இபிஎப்ஓ

புதுடெல்லி: பணியாளர் ஓய்வூதிய திட்டத்தின் (இபிஎஸ்) கீழ் அதிக பென்ஷன் தொகை பெறுவதற்கான வழி காட்டுதல்களை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான ‘‘இபிஎப்ஓ’’ வெளியிட்டுள்ளது.

இதற்கு முன் அதிக ஓய்வூ தியத்திற்கு விண்ணப்பிக்காத, ஆனால் தகுதியான நபர்கள் இப்போது விண்ணப்பிக்கலாம்.அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மார்ச் 3, 2023 உடன் முடிவடை கிறது.

இந்த வழிகாட்டல் நெறிமுறை சுற்றறிக்கையின்படி, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இணங்க பணியாளர்கள் தங்கள் முதலாளிகளுடன் தொடர்புடைய பிராந்திய அலுவலகத்தில் பத்தி 11 (3) மற்றும் 11(4) ஆகியவற்றின் கீழ் கூட்டு விருப்பத்தினை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x