Published : 17 Feb 2023 05:50 PM
Last Updated : 17 Feb 2023 05:50 PM

சென்செக்ஸ் 317 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 317 புள்ளிகள் (0.52 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 61,002 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 91 புள்ளிகள் (0.51 சதவீதம் ) வீழ்ச்சியடைந்து 17,944 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வார இறுதி நாள் வர்த்தகம் வீழ்ச்சியுடனேயே தொடங்கின. காலை 10:09 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 124.57 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 61,194.94 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 40.85 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,995.00 ஆக இருந்தது.

மத்திய வங்கிகள் வட்டி விகித உயர்வை நீட்டிக்கும் என்று வெளியான தகவலால் முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட அச்ச உணர்வு, நிதி மற்றும் தகவல் தொழில்நுட்ப பங்குகளின் வீழ்ச்சி போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் தங்களது 3 நாட்கள் லாபத்தினை நிறைவு செய்து வீழ்ச்சியில் நிறைவடைந்து. இன்றைய வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் இன்றைய நாளில் 60,811 வரை கீழே இறங்கியது.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 316.94 புள்ளிகள் வீழ்ச்சிடைந்து 61,002.57 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 91.65 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,944.20 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எல் அண்ட் டி, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், என்டிபிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், ஐடிசி, மாருதி சுசூகி பங்குகள் உயர்வடைந்திருந்தன. டெக் மகேந்திரா, பஜாஜ் ஃபின்சர்வ், டாடா மோட்டார்ஸ்,ஹெச்டிஎஃப்சி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஃபின்சர்வ், விப்ரோ, பாரதி ஏர்டெல், இன்போசிஸ், ஆக்ஸிஸ் பேங்க், சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டிசிஎஸ், கோடாக் மகேந்திரா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எம் அண்ட் எம், இன்டஸ்இன்ட் பேங்க், நெஸ்ட்லே இந்தியா பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x