Published : 16 Feb 2023 10:35 AM
Last Updated : 16 Feb 2023 10:35 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 360 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வியாழக்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 315 புள்ளிகள் உயர்வடைந்து 61,590 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 85 புள்ளிகள் உயர்வடைந்து 18,100 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கின. காலை 10:10 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 358.99 புள்ளிகள் உயர்வடைந்து 61,634.08 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 106.70 புள்ளிகள் உயர்வடைந்து 18,122.55 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் நிலவிய சாதகமான சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்தில் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டெக் மகேந்திரா, டிசிஎஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், விப்ரோ, இன்போசிஸ், ஏசியன் பெயின்ட்ஸ், சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஹெச்சிஎஸ் டெக்னாலஜிஸ், எல் அண்ட் டி, டாடா ,ஸ்டீல், எம் அண்ட் எம், ஐடிசி, ஹெச்டிஎஃப்சி, டைட்டன் கம்பெனி, ஹெச்டிஎஃப்சி பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, என்டிபிசி, இன்டஸ்இன்ட் பேங்க்ஸ பஜாஜ் ஃபின்சர்வ், பாரதி ஏர்டெல் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. பவர் கிரிடு கார்ப்பரேஷன், நெஸ்ட்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், மாருதி சுசூகி, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x