Published : 15 Feb 2023 10:20 AM
Last Updated : 15 Feb 2023 10:20 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ்183 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (புதன்கிழமை) வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 205 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 60,826 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 58 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,871 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வாரத்தின் மூன்றாவது நாள் வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கின. காலை 09:50 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 183.55 புள்ளிகள் சரிவடைந்து 60,848.71 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 70.65 புள்ளிகள் சரிவடைந்து 17859.20 ஆக இருந்தது.

அமெரிக்க பணவீக்கத் தரவுகள் நேற்று வெளியான நிலையில் வட்டி விகிதம் எதிர்பார்த்ததை விட அதிகரித்து இருந்தது. தொடர்ந்து நீடித்து வரும் வட்டி விகித உயர்வு காரணமாக இந்தியப் பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை வீழ்ச்சியிலேயே தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், எம் அண்ட் எம், டாடா மோட்டார்ஸ், பங்குகள் உயர்வில் இருந்தன. நெஸ்ட்லே இந்தியா, ஏசியன் பெயின்ட்ஸ், டைட்டன் கம்பெனி, ஹெச்டிஎஃப்சி, விப்ரோ, எல் அண்ட் டி ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x