Published : 10 Feb 2023 05:31 PM
Last Updated : 10 Feb 2023 05:31 PM

சென்செக்ஸ் 124 புள்ளிகள் சரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வார இறுதி நாள் வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 124 புள்ளிகள் (0.20 சதவீதம்) வீழ்ச்சிடைந்து 60,682 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 37 புள்ளிகள் (0.21 சதவீதம் ) சரிவடைந்து 17,856 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தை சரிவுடனேயே தொடங்கின. காலை 09:34 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 216.86 புள்ளிகள் சரிவடைந்து 60,589.36 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 45.80 புள்ளிகள் சரிவடைந்து 17,847.65 ஆக இருந்தது.

அமெரிக்க மந்தநிலை குறித்த அச்சம் காரணமாக உலகளாவிய சந்தைகளில் பங்குகளின் வீழ்ச்சி, குறியீட்டு வழங்குனரான எம்எஸ்சிஐ நிறுவனம் நான்கு அதானி குழும நிறுவனங்களின் பங்குமதிப்பை குறைக்கப்போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து வீழ்ச்சியடைந்த அதானி நிறுவன பங்குகளின் வீழ்ச்சி, சந்தையைத் தூண்டி விடுவதற்கு புதிதாக காரணிகள் இல்லாதது போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியில் நிறைவடைந்தன.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 123.52 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 60,682.70ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 36.95 புள்ளிகள் உயர்வடைந்து17,856.50 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா மோட்டார்ஸ், எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி, நெஸ்ட்லே இந்தியா பங்குகள் உயர்வடைந்திருந்தன. ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ், எம் அண்ட் எம், விப்ரோ, ஐடிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் டாடா ஸ்டீல் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x