

ஹைதராபாத்: வழக்கமாக ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து எல்லோரும் அச்சடித்த கரன்சி நோட்டுகளைதான் எடுப்போம். இந்தச் சூழலில் ஏடிஎம் மூலம் தங்கம் வாங்கலாம் என தெரிவித்துள்ளது ஹைதராபாத் நகரில் இயங்கி வரும் கோல்ட்சிக்கா நிறுவனம். நாட்டிலேயே முதல் முறையாக இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக அளவில் தங்கத்தை அதிகம் நுகர்வு செய்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதனால், நம் நாட்டில் தங்கத்திற்கான டிமாண்ட் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அதைக் கருத்தில் கொண்டு தங்க நுகர்வை 24x7 என்ற கணக்கில் எந்நேரமும் பெற இந்த கோல்டு ஏடிஎம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கோல்டு ஏடிஎம் மூலம் தங்கம் வாங்குவது எப்படி?