Published : 19 Apr 2022 04:36 PM
Last Updated : 19 Apr 2022 04:36 PM
டோங்க்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் துணைகொண்டு காளான் வளர்ப்பு மூலம் தொழில்முனைவோராக மாறியுள்ளனர் ராஜஸ்தான் மாநிலத்தின் டோங்க் மாவட்டத்தில் வசித்து வரும் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள். இந்த வெற்றிக்கதையை சற்றே விரிவாகப் பார்ப்போம்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றுதான் இந்த டோங்க் மாவட்டம். கடந்த 2006 வாக்கில் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அறிவித்த நாட்டின் பின்தங்கிய 250 மாவட்டங்களில் டோங்க் மாவட்டமும் ஒன்று. அதோடு பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்கான நிதியையும் பெற்று வரும் மாவட்டமாகவும் இது உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த மாவட்டத்தின் மக்கள்தொகை 14,21,326. சுமார் 1,093 கிராமங்களை உள்ளடக்கிய இந்த மாவட்டத்தின் மக்கள் தொகையில் 62.46 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்கள். எனினும், நாட்டின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான டோங்க் மாவட்டத்தில் வசித்து வரும் ஊரகப் பகுதியை சேர்ந்த பெண்கள்தான் இப்போது தொழில்முறை ரீதியாக காளான் சாகுபடி செய்து வருகின்றனர். அதன் மூலம் தங்களுக்கு தேவையான வாழ்வாதாரத்தையும் அவர்கள் ஈட்டி வருகின்றனர். இதனால் தற்போது தன்னிறைவுடனும் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment