Published : 25 Nov 2014 12:10 PM
Last Updated : 25 Nov 2014 12:10 PM

கிளென் சல்தானா - இவரைத் தெரியுமா?

$ கிளென்மார்க் பார்மா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்.

$ தன் இரு மகன்களான கிளென் சல்தானா மற்றும் மார்க் சல்தானா ஆகியோரின் முதல் பெயரில் ஆரம்பித்த நிறுவனம்தான் கிளென்மார்க் பார்மா. இவரது தந்தை 1977-ம் ஆண்டு ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்த நிறுவனம் இது.

$ மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பார்மா படித்தவர். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் லெனார்ட் ஸ்டெர்ன் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்தவர்.

$ படித்துமுடித்தவுடன் எலி லில்லி மற்றும் பிரைஸ்வாட்டர் ஹவுஸ் கூப்பர் நிறுவனத்தில் ஆலோசகராக இருந்தார்.

$ 1988-ம் ஆண்டு நிறுவனத்தில் இயக்குநராக இணைந்தார். 2001-ம் ஆண்டு தன்னுடைய 29-வயதில் நிறுவனத்தின் தலைமைச்செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார்.

$ இவர் பொறுப்பேற்ற போது 80 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் நிறுவனம் இன்று சில ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டும் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x