Published : 18 Jan 2014 10:56 AM
Last Updated : 18 Jan 2014 10:56 AM

டி.சி.எஸ். நிறுவன பங்கு சரிவு

ஐ.டி. துறையின் முன்னணி நிறுவனமான டி.சி.எஸ் நிறுவன பங்கு வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 6 சதவீத அளவுக்கு சரிந்தது. வர்த்தகத்தின் முடிவில் 137 ரூபாய் சரிந்து 2,213 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.

இந்த சரிவின் காரணமாக டி.சி.எஸ். நிறுவனத்தின் சந்தை மதிப்பு 22,808 கோடி ரூபாய் அளவுக்கு சரிந்திருக்கிறது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் முடிவில் டி.சி.எஸ். நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 4,33,985 கோடியாக இருந்தது.

இந்திய சந்தைகள் வீழ்ந்ததற்கு முக்கிய காரணம் டி.சி.எஸ். பங்கு விலைகள் சரிந்ததுதான் காரணம். சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியில் இருக்கும் பங்குகளில் அதிகம் சரிவடைந்தது டி.சி.எஸ். பங்குதான்.

வியாழக்கிழமை இந்த நிறுவனத்தின் முடிவுகள் நன்றாக வந்திருந்தாலும் இந்த லாப வரம்புகள் கடந்த வருடத்தின் இதே காலாண்டை விட குறைவாக வந்திருப்பதுதான் இந்த சரிவுக்கு காரணம் என்று பங்குச்சந்தை வல்லுனர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

முன்னதாக டி.சி.எஸ் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகரலாபம் 50.3 சதவீதம் அதிகரித்தது. கடந்த நிதி ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ரூ3,550 கோடி நிகர லாபம் அடைந்த இந்த நிறுவனம் நடந்து முடிந்த டிசம்பர் காலாண்டில் ரூ.5,333 கோடி லாபம் ஈட்டியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x