Published : 23 Mar 2014 06:40 PM
Last Updated : 23 Mar 2014 06:40 PM

அடுத்த நிதி ஆண்டில் 55 முதல் 60 மகளிர் வங்கிகள்

பாரதிய மகிளா வங்கி தன்னுடைய 19-வது கிளையை ஐதராபாத்தில் சனிக்கிழமை துவங்கியது.

நடப்பு நிதி ஆண்டு முடிவதற்குள் 23 முதல் 24 வங்கி கிளைகள் தொடங்கப்படும் என்றும், அடுத்த நிதி ஆண்டில் 55 முதல் 60 வங்கி கிளைகள் திறக்கப்படும் என்றும் வங்கியின் முக்கிய அதிகாரி தெரிவித்தார்.

கடந்த வருட நவம்பர் மாதம் இந்த வங்கியின் முதல் கிளை தொடங்கப்பட்டது. அனைத்து தரப்பு பெண்களின் வளர்ச்சிக்காகவும் பல திட்டங்கள் இருக்கிறது என்று வங்கியின் தலைவர் உஷா அனந்தசுப்ரமணியன் தெரிவித்தார்.

மேலும் ஒரு கோடி ரூபாய் வரைக்கும் பிணை இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x