Published : 19 Nov 2014 01:09 PM
Last Updated : 19 Nov 2014 01:09 PM

மகேஷ் மூர்த்தி - இவரை தெரியுமா?

$ இந்தியாவில் துணிகர முதலீடுகளை மேற்கொள்ளும் நிறுவனங்களில் ஒன்றான பின்ஸ்டார்ம் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சீட்ஃபண்ட் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர்.

$ கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டவர். ஆரம்ப நாளில் வீடு வீடாக வாக்குவம் கிளீனர் விற்பனை செய்தார். பின்னர் கிரே இந்தியா மற்றும் ஹாங்காங்கில் உள்ள ஒகில்வி நிறுவனத்தில் விளம்பர பிரிவில் சேர்ந்தார்.

$ இங்குதான் ஹெச்பி, மைக்ரோசாப்ட், யுனிலீவர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கான விளம்பரங்களை உருவாக்கி பிரபலமானார்.

$ இந்தியா திரும்பிய இவர் எம்டிவி-க்கு போட்டியாக சேனல் ஃபைவ் எனும் தொலைக்காட்சி சேனலை நடத்தினார். பின்னர் இந்நிறுவனத்தை நியூஸ்கார்ப் நிறுவனத்துக்கு 2000-ம் ஆண்டில் விற்பனை செய்தார்.

$ 2006-ம் ஆண்டில் சீட்ஃபண்ட் எனும் துணிகர முதலீட்டு நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனம் முதலீடு செய்துள்ள 12 நிறுவனங்களில் கார்வேல், ரெட்பஸ், ஏஎப்ஏக்யூஎஸ் மற்றும் வாத்சால்யா ஆகியன குறிப்பிடத்தக்கவை.

$ வால்ஸ்ட்ரீட் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x