Published : 08 Jan 2014 09:52 AM
Last Updated : 08 Jan 2014 09:52 AM

வருண் பேரி - இவரைத் தெரியுமா?

$ பிரிட்டானியா நிறுவனத்தின் தற்போதைய தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் வினிதா பாலி வரும் மார்ச் மாதம் பதவி விலகப்போவதாக வந்த செய்தியை அடுத்து, அந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வரப்போவதாக உறுதிபடுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

$ கடந்த வருடம் ஜனவரி 7-ம் தேதி பிரிட்டானியா நிறுவனத்தில் சேர்ந்த வருண், ஒரு வருடத்தில் மூன்று முறை பதவி உயர்த்தப்பட்டார். சி.இ.ஒ. பொறுப்பு கிடைக்கும் பட்சத்தில் அது நான்காவது பதவி உயர்வாக இருக்கும்.

$ இதற்கு முன்பு 20 வருடங்கள் பெப்சிகோ இந்தியா நிறுவனத்தின் பல முக்கிய பொறுப்புகளை வகித்திருக்கிறார். பெப்சிகோ உணவுப்பிரிவிற்கு தெற்கு ஆசியா முழுமைக்கும் சி.இ.ஒ.வாக இருந்தார்.

$ பெப்சிகோ நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்.

$ பஞ்சாப் பல்கலைகழகத்தில் என்ஜீனியரிங்கும், எம்.பி.ஏவும் படித்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x