Published : 09 Jan 2014 09:56 AM
Last Updated : 09 Jan 2014 09:56 AM

ஆதித்ய புரி - இவரைத் தெரியுமா?

$ ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் நிர்வாக இயக்குநர்.

$ 1975-ம் ஆண்டு மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக பயிற்சியாளராகச் சேர்ந்த இவர், சில மாதங்களில் அங்கிருந்து சிட்டி பேங்க்குக்கு சென்றார்.

$ 1976 முதல் 94-ம் ஆண்டு வரை சிட்டி வங்கியில் பணியாற்றிய இவர், அதன் பிறகு ஹெச்.டி.எஃப்.சி.யின் வங்கியின் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

$ ஹெச்.டி.எஃப்.சி. வங்கிக்கு வரும் முன்பு சிட்டி வங்கியின் மலேசியா பிரிவில் தலைமைப் பொறுப்பில் இருந்தார்.

$ இந்திய தனியார் வங்கிகளில் அதிக ஆண்டுகள் தலைமை பொறுப்பில் இருந்தது ஆதித்ய புரிதான்.

$ வேலை நேரத்தை தாண்டி வேலை செய்வதை விரும்பமாட்டார். தனிப்பட்ட வாழ்க்கைக்கும் ஓய்வுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்.

$ பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பி.காம் பட்டமும், சார்டட் அக்கவுண்டட் முடித்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x