Published : 28 Nov 2013 12:00 AM
Last Updated : 28 Nov 2013 12:00 AM

ஷிகா சர்மா - இவரைத் தெரியுமா?

#இந்தியாவின் நான்காவது பெரிய தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி.

#ஆமதாபாத் இந்திய நிர்வாகவியல் மையத்தில் இளங்கலை பட்டமும், முதுகலையில் நிர்வாகவியல் பட்டமும் பெற்றவர்.

#ஐசிஐசிஐ வங்கியில் 29 ஆண்டுகள் பணியாற்றிய இவர், தலைமைப் பதவி சாந்தா கொச்சாருக்கு சென்றதால் அங்கிருந்து வெளியேறி ஆக்சிஸ் வங்கிக்கு தலைமைப் பொறுப்பேற்றார்.

#இவரது தலைமையில் ஆக்சிஸ் வங்கியின் வர்த்தகம் 2012--13-ம் ஆண்டில் 30 சதவீத வளர்ச்சி அடைந்து 5,500 பில்லியன் டாலராக உயர்ந்தது. வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 1,500 ஆகவும், ஏடிஎம்களின் எண்ணிக்கை 8,300 ஆகவும் உயர்ந்தது.

#தொழில் திறன் மிக்க 50 பெண்களை சர்வதேச அளவில் ஃபோர்ப்ஸ் இதழ் பட்டியலிட்டது.

#இதில் 32-வது இடத்தில் உள்ளார் ஷிகா.

#சிறந்த நிர்வாகவியல் தலைவர், சிறந்த நிர்வாக பெண்மணி, சிறந்த வங்கியாளர் என பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது ஆண்டு சம்பளம் ரூ. 1.96 கோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x