Published : 27 Aug 2014 10:00 AM
Last Updated : 27 Aug 2014 10:00 AM
நடப்பு நிதி ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8.75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் கே.கே.ஜலான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஐந்து கோடி வாடிக்கையாளர்கள் பி.எப். கணக்கு வைத்திருக்கிறார்கள். கடந்த நிதி ஆண்டிலும் 8.75 சதவித வட்டி நிர்ணயம் செய்யப்பட்டது.
நடப்பு நிதி ஆண்டில் 8.8 சதவீதமாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த வருடத்தின் வட்டி விகிதமே தொடரும் என்று ஆணையர் தெரிவித்தார். இது தொடர்பான இறுதி அறிக்கையை நிதி அமைச்சர் பிறகு வெளியிடுவார் என்று தெரிகிறது. 2012-13-ம் ஆண்டில் வட்டி விகிதம் 8.5 சதவீதமாகவும், 2013-14-ம் ஆண்டில் 8.75 சதவீதமாகவும் இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT