Published : 28 Feb 2024 04:04 AM
Last Updated : 28 Feb 2024 04:04 AM

மார்ச் 5 முதல் கோவை - பெங்களூரு உதய் விரைவு ரயில் தினசரி இயக்கம்

பிரதிநிதித்துவப் படம்

கோவை: கோவை - பெங்களூரு இடையிலான உதய் விரைவு ரயில் வரும் மார்ச் 5-ம் தேதி முதல் தினந்தோறும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வண்டி எண் 22666 / 22665 கோவை - பெங்களூரு இடையிலான உதய் விரைவு ரயில் சேவை புதன் கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உதய் விரைவு ரயில் சேவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை - பெங்களூரு உதய் விரைவு ரயில் மார்ச் 5-ம் தேதி முதல் வாரத்தின் 7 நாட்களும் இயக்கப்படும். தினமும் கோவையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்குப் புறப்பட்டு பகல் 12.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும். பெங்களூரில் இருந்து பகல் 2.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 9 மணிக்கு கோவை வந்தடையும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x