Published : 18 Aug 2014 10:00 AM
Last Updated : 18 Aug 2014 10:00 AM
தனது ஊழியர்களுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் ஊதிய உயர்வு அளிக்கப் போவதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது. நிர்வாகத்துக்கும், ஊழியர் சங்கங்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை முடிவில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
நிறுவனத்தில் 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலும் பணி யாற்றும் ஊழியர்களுக்கு ரூ. 10 ஆயிரமும், 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ. 9,500-ம் வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. பஜாஜ் நிறுவனத்தின் சக்கன் ஆலையில் அடிக்கடி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். நிர்வாகத்துக்கும், ஊழியர் சங்கங்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டது.
ஊதிய உயர்வு ஏப்ரல் 1, 2013-முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும். ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கானதாகும். இருப்பினும் பஜாஜ் ஆட்டோ பங்குகளை குறைந்த விலையில் பணியாளர்களுக்கு அளிப்பது தொடர்பாக எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. ஒப்பந்தத்தை அடுத்து ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை 15 நாள்களுக்குள் திரும்பப் பெற நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT