Published : 06 Aug 2014 10:00 AM
Last Updated : 06 Aug 2014 10:00 AM

டாக்டர் அசோக் குமார் பால்யன் - இவரைத் தெரியுமா?

# எரிசக்தித் துறையில் செயல்பட்டு வரும் நிறுவனமான பெட்ரோநெட் எல்என்ஜியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.

# ஐஐடி டெல்லியில் முதுகலைப் பட்டமும், ஜெர்மனியில் முனைவர் பட்டமும் முடித்தவர்.

# படித்து முடித்து டெல்லியில் இருக்கும் ராம் குழுமத்தில் தன்னுடைய கார்ப்பரேட் வாழ்க்கையை ஆரம்பித்தவர்.

# 1976ம் ஆண்டு ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு பல முக்கிய பொறுப்புகளை வகித்தார். பெட்ரோட் நிறுவனத்துக்கு வரும் முன்பு ஹெச்.ஆர். துறை மற்றும் வியாபார மேம்பாட்டு பிரிவுகளின் இயக்குநராக ஓ.என்.ஜி.சி.யில் இருந்தார்.

# ஓ.என்.ஜி.சி.யின் துணை நிறுவனங்களான ஓ.என்.ஜி.சி, விதேஷ், எம்.ஆர்.பி.எல்., மங்களூர் எஸ்.இ.இசட், திரிபுரா பவர் கம்பெனி உள்ளிட்ட நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இருந்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x