Published : 28 Sep 2023 10:52 AM
Last Updated : 28 Sep 2023 10:52 AM

ஏற்றத்தில் தொடங்கி தடுமாறத் தொடங்கிய பங்குச்சந்தை 

மும்பை: பங்குச்சந்தை இன்று காலை 10:28 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 0.04 புள்ளிகள் உயர்வடைந்து 66,118.73 ஆக இருந்தது.

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (வியாழக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 125 புள்ளிகள் உயர்வடைந்து 66,244 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 28 புள்ளிகள் உயர்ந்து 19,744 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கி, பின் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்தது. காலை 10:28 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 0.04 புள்ளிகள் உயர்வடைந்து 66,118.73 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 18.50 புள்ளிகள் உயர்ந்து 19,734.95 ஆக இருந்தது. ஆசிய பங்குச்சந்தைகளின் கலப்புச் சூழல், வங்கி மற்றும் உலோக பங்குகளின் ஏற்றம் காரணமாக ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தைகள் பின்னர் ஏற்ற இறக்கத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எல் அண்ட் டி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஆக்ஸிஸ் பேங்க், டாடா ஸ்டீல், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, என்டிபிசி, பாரதி ஏர்டெல், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி பேங்க், இன்டஸ்இன்ட் பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ பேங்க், டிசிஎஸ் பங்குகள் உயர்வில் இருந்தன. டெக் மகேந்திரா, ஏசியன் பெயின்ட்ஸ், எம் அண்ட் எம், ஐடிசி, நெஸ்ட்லே இந்தியா, டைட்டன் கம்பெனி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், பஜாஜ் ஃபின்சர்வ், விப்ரோ, பஜாஜ் ஃபைனான்ஸ், இன்போசிஸ், மாருதி சுசூகி பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x