Published : 22 Sep 2023 10:51 AM
Last Updated : 22 Sep 2023 10:51 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 129 புள்ளிகள் சரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்ற இறக்கமின்றி தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 57 புள்ளிகள் சரிவடைந்து 66,172 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 11 புள்ளிகள் சரிந்து 19,754 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை தட்டையாகத் தொடங்கின. காலை 10:13 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 129.81 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 66,100.43 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 50.85 புள்ளிகள் சரிந்து 19,691.50 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் நிலவும் குழப்பமான சூழல்கள், அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகிதம் குறித்த முன்னெச்சரிக்கை முதலீட்டாளர்களிடம் ஏற்படுத்திய எச்சரிக்கை உணர்வு காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்றயை வர்த்தகத்தை ஏற்ற இறக்கமின்றி தொடங்கின. பின்னர் சரிவைச் சந்தித்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை மாருதி சுசூகி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டெக் மகேந்திரா, எம் அண்ட் எம், பஜாஜ் ஃபின்சர்வ், இன்டஸ்இன்ட் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், எல் அண்ட் டி, ஆக்ஸிஸ் பேங்க், ரிலையன்ல் இன்ட்ஸ்ட்ரீஸ் பங்குகள் உயர்வில் இருந்தன.

பவர் கிரிடு கார்ப்பரேஷன், விப்ரோ, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், என்டிபிசி, டைட்டன் கம்பெனி, ஐடிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட், இன்போசிஸ், ஐசிஐசிஐ பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்டிஎஃப்சி, டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், பாரதி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்ட்லே இந்தியா, கோடாக் மகேந்திரா பேங்க் பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x