Published : 13 Sep 2023 10:56 AM
Last Updated : 13 Sep 2023 10:56 AM

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை | சென்செக்ஸ் 14 புள்ளிகள் சரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (புதன்கிழமை) சரிவுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 71 புள்ளிகள் சரிவடைந்து 67,150 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 18 புள்ளிகள் சரிந்து 19,974 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை சரிவுடனேயை தொடங்கின. காலை 10:26 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 14.57 புள்ளிகள் சரிவடைந்து 67,206.56 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 37.85 புள்ளிகள் சரிந்து 19,955.35 ஆக இருந்தது.

நேர்மறையான மேக்ரோ பொருளாதார தரவுகளால் முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்ய முனைந்ததால் புதன்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் சற்றே சரிவுடன் தொடங்கின. தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் பயணித்தது. முதலீட்டாளர்கள் இன்று வெளியாகவிருக்கும் அமெரிக்கா பணவீக்க தரவுகளுக்காக காத்திருப்பதால் எச்சரிக்கையாக இருந்தனர்.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஐடிசி, நெஸ்ட்லே இந்தியா, பவர் கிரிடு கார்ப்பரேஷன், டாடா மோட்டார்ஸ், டைட்டன் கம்பெனி, கோடாக் மகேந்திரா பேங்க், பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், சன்பார்மா இன்ட்ஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஆக்ஸிஸ் பேங்க், என்டிபிசி பங்குகள் உயர்வில் இருந்தன.

ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், பஜாஜ் ஃபின்சர்வ், ஏசியன் பெயின்ட்ஸ், ஐசிஐசிஐ பேங்க், எம் அண்ட் எம், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், இன்போசிஸ், இன்ட்ஸ்இன்ட் பேங்க், மாருதி சுசூகி, பஜாஜ் ஃபைனான்ஸ், டிசிஎஸ், டெக் மகேந்திரா, விப்ரோ பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x