Published : 11 Sep 2023 11:08 AM
Last Updated : 11 Sep 2023 11:08 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 307புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (திங்கள்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 169 புள்ளிகள் உயர்வடைந்து 66,768 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 61 புள்ளிகள் உயர்ந்து 19,881ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. காலை 10:33 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 307.50 புள்ளிகள் உயர்வடைந்து 66,906.41 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி104.20 புள்ளிகள் உயர்ந்து 19,924.15 ஆக இருந்தது.

ஜி20 உச்சி மாநாட்டின் வெற்றி, நிதி பங்குகளின் எழுர்ச்சி போன்ற காரணங்களால் உந்தப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள் இந்த வாரத்தின் தொடக்க நாளை ஏற்றத்துடன் தொடங்கின. நிஃப்டி அதன் ஜூலை மாத எல்லா நேர உச்சமான 20,000 புள்ளிக்களை நெருங்கியது. அதேபோல் அனைத்து பங்குகளும் உயர்வில் இருந்தன.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா ஸ்டீல், மாருதி சுசூகி, விப்ரோ, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஜெஎஸ்எல் டபில்யூ ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, நெஸ்ட்லே இந்தியா, கோடாக் மகேந்திரா பேங்க், டிசிஎஸ், டெக் மகேந்திரா, ஆக்ஸிஸ் பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஹிந்துதான் யுனிலீவர், எம் அண்ட் எம், ஏசியன் பெயின்ட்ஸ், டைட்டன் கம்பெனி, ஐடிசி, பஜாஜ் ஃபின்சர்வ், எல் அண்ட் டி, சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ பேங்க் , ஹெச்டிஎஃப்சி பேங்க், என்டிபிசி, பஜாஜ் ஃபைனான்ஸ், இன்போசிஸ் பங்குகள் உயர்வில் இருந்தன.

இன்டஸ்இன்ட் பேங்க், பவர் கிரிடு கார்ப்பரேஷன், பாரதி ஏர்டெல் பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x