Published : 07 Sep 2023 10:25 AM
Last Updated : 07 Sep 2023 10:25 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 91 புள்ளிகள் சரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (வியாழக்கிழமை) சரிவுடனேயே தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 76 புள்ளிகள் சரிவடைந்து 65,803 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 22 புள்ளிகள் சரிந்து 19,588 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை தட்டையாக தொடங்கின. பின்னர் ஏற்ற இறக்கம் காணத் தொடங்கின. காலை 10:07 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 91.32 புள்ளிகள் சரிவடைந்து 65,789.20 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 21.70 புள்ளிகள் சரிந்து 19,589.35 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் கலவையான சூழல்களுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்ததால், இந்திய பங்குச்சந்தைகள் தட்டையாகத் தொடங்கின. என்றாலும் வர்த்தக நேரத்தின் போது சரியத் தொடங்கியது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை மாருதி சுசூகி, டாடா ஸ்டீல், எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஜியோ ஃபைனான்ஸ், டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், பங்குகள் உயர்வில் இருந்தன.

பாரதி ஏர்டெல், ஐடிசி, ஹெச்டிஎஃப்சி பேங்க், விப்ரோ, பஜாஜ் ஃபின்சர்வ், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மகேந்திரா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், கோடாக் மகேந்திரா பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், டைட்டன் கம்பெனி, இன்போசிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், என்டிபிசி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், நெஸ்ட்லே இந்தியா, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், எம் அண்ட் எம், பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x