Published : 05 Sep 2023 10:52 AM
Last Updated : 05 Sep 2023 10:52 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 148 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) சற்றே ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 69 புள்ளிகள் உயர்வடைந்து 65,697 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 18 புள்ளிகள் உயர்ந்து 19,547 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. காலை 10:21 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 148.14 புள்ளிகள் உயர்வடைந்து 65,776.28 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 50.45 புள்ளிகள் உயர்ந்து 19,579.25 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் சாதகமான சூழல்கள், ரியாலிட்டி, பார்மா, வாகனம், எண்ணெய், எஃப்எம்சிஜி பங்குகளின் வாங்குதல் காரணமாக பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி தொடர்ந்தன.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை கோடாக் மகேந்திரா பேங்க், டைட்டன் கம்பெனி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, எல் அண்ட் டி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், இன்போசிஸ், டிசிஎஸ், நெஸ்ட்லே இந்தியா, மாருதி சுசூகி, விப்ரோ, இன்டஸ்இன்ட் பேங்க் பங்குகள் உயர்வில் இருந்தன. ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், பாரதி ஏர்டெல், எம் அண்ட் எம், பவர் கிரிடு கார்ப்பரேஷன், என்டிபிசி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ் பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x