Published : 01 Sep 2023 06:28 PM
Last Updated : 01 Sep 2023 06:28 PM

சென்செக்ஸ் 555 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 555 புள்ளிகள் (0.86 சதவீதம்) உயர்வடைந்து 65,387 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 181 புள்ளிகள் (0.94 சதவீதம்) உயர்ந்து 19,435 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்ற இறக்கமின்றி தொடங்கிய போதிலும் வர்த்தக நேரத்தின்போது உயர்வடைந்தன. காலை 11:14 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 211.77 புள்ளிகள் உயர்வடைந்து 65,043.18 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 86.00 புள்ளிகள் உயர்ந்து 19,339.80 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் பலவீனமான சூழல்களுக்கு மத்தியில் ஏற்ற இறக்கமின்றி தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள், வர்த்தகத்தின் போது உயரத் தொடங்கியது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி அறிக்கை, உலோகம் மற்றும் வாகனப் பங்குகளின் ஏற்றத்தால், தொடர்ந்து 5 வார சரிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்த வாரத்தின் கடைசி நாளை ஏற்றத்துடன் நிறைவு செய்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 555.75 புள்ளிகள் உயர்வடைந்து 65,387.16 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 181.50 புள்ளிகள் உயர்ந்து 19,435.30 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை என்டிபிசி, மாருதி சுசூகி, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், பவர் கிரிடு கார்ப்பரேஷன், இன்டஸ்இன்ட்பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், டெக் மகேந்திரா, விப்ரோ, ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பாரதி ஏர்டெல், எம் அண்ட் எம், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐசிஐசிஐ பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க், டிசிஎஸ், இன்போசிஸ், ஐடிசி. ஏசியன் பெயின்ட்ஸ், ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், டைட்டன் கம்பெனி, ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் உயர்வடைந்திருந்தன.

அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, நெஸ்ட்லே இந்தியா பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x