Published : 30 Aug 2023 07:52 PM
Last Updated : 30 Aug 2023 07:52 PM

ஏற்ற இறக்கமின்றி நிறைவடைந்த பங்குச்சந்தை

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை பெரிதாக ஏற்ற இறக்கமின்றி நிறைவடைந்தன. சென்செக்ஸ் 11 புள்ளிகள் (0.02 சதவீதம்) உயர்வடைந்து 65,087 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 4 புள்ளிகள் (0.02 சதவீதம்) உயர்ந்து 19,347 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை உயர்வுடன் தொடங்கியிருந்தன. காலை 10:12 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 330.44 புள்ளிகள் உயர்வடைந்து 65,406.26 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 93.95 புள்ளிகள் உயர்ந்து 19,436.60 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் பலவீனமான சூழல், ஏப்ரல் - ஜூன் மாத ஜிடிபி குறித்த முதலீட்டாளர்களின் எச்சரிக்கைகளுக்கு மத்தியில் இந்தியப் பங்குசந்தைகள் நிலையில்லாமல் பயணித்து இன்றைய வர்த்தகத்தை ஏற்ற இறக்கமின்ற நிறைவு செய்தது

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 11.43 புள்ளிகள் உயர்வடைந்து 65,087.25 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 4.80 புள்ளிகள் உயர்ந்து 19,347.45 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஜியோ ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், எம் அண்ட் எம், மாருதி சுசூகி, இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், நெஸ்ட்லே இந்தியா, ஐடிசி, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், பாரதி ஏர்டெல், ஆக்ஸிஸ் பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டைட்டன் கம்பெனி பங்குகள் உயர்வடைந்திருந்தன.

பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், இன்டஸ்இன்ட் பேங்க், டெக் மகேந்திரா, என்டிபிசி, கோடாக் மகேந்திரா, எல் அண்ட டி, விப்ரோ, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x