Published : 30 Aug 2023 08:08 AM
Last Updated : 30 Aug 2023 08:08 AM

மின்சாரம், எத்தனாலில் இயங்கும் உலகின் முதல் பிஎஸ் 6 கார்: அறிமுகம் செய்தார் கட்கரி

புதுடெல்லி: மின்சாரம் மற்றும் எத்தனாலில் இயங்கும் டொயோட்டா நிறுவனத்தின் பிஎஸ் 6 மாடல் காரை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று அறிமுகப்படுத்தினார். இது மின்சாரம் மற்றும் எத்தனாலில் இயங்கும் உலகின் முதல் பிஎஸ் 6 கார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் 10% எத்தனால் கலக்கப்படுகிறது. அதை 20% ஆக அதிகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. முதற்கட்டமாக, கடந்த ஏப்ரல் மாதம் சில இடங்களில் 20% எத்தனால் கலப்பு கொண்ட பெட்ரோல் அறிமுகப்படுத்தப்பட்டது. 2025-க்குள் நாடு முழுவதுவம் 20% எத்தனால் கலப்பு பெட்ரோலை பரவலாக பயன்பாட்டுக்குக் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டொயோட்டா நிறுவனம் இனோவா ஹைகிராஸ் காரை மின்சாரத்திலும் 100% எத்தனாலிலும் இயங்கும் வகையிலான ஹைபிரிட் காராக உருவாக்கியுள்ளது. இந்தியாவில் 40% மின் வாகனங்களும் 60% எத்தனால் கலப்பு எரிபொருளும் பரவலாக பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் பெட்ரோல் விலை ரூ.15 ஆக குறையும் என்று நிதின் கட்கரி ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x