Published : 28 Aug 2023 10:57 AM
Last Updated : 28 Aug 2023 10:57 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 91 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (திங்கள்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 147 புள்ளிகள் உயர்வடைந்து 65,034 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 53 புள்ளிகள் உயர்ந்து 19,318 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை உயர்வுடன் தொடங்கியிருந்தாலும் வர்த்தக நேரத்தின் போது ஏற்ற இறக்கத்துடன் பயணித்தது. காலை 10:22 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 91.68 புள்ளிகள் உயர்வடைந்து 64,978.19 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 13.90 புள்ளிகள் உயர்ந்து 19,279.70 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் சூழல் மற்றும் திங்கள் கிழமை மதியம் நடக்க இருக்கும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்துவதால், இந்திய பங்குச்சந்தைகள் தனது ஆரம்ப லாபத்தை தவற விட்டு ஏற்ற இறக்கத்தில் இருந்தன.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஜியோ ஃபைனான்ஸ், எம் அண்ட் எம், பவர் கிரிடு கார்ப்பரேஷன், எல் அண்ட் டி, மாருதி சுசூகி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், ஐடிசி, ஹெச்டிஎஃப்சி, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், என்டிபிசி, டாடா மோட்டார்ஸ், இன்டஸ்இன்ட் பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் உயர்வில் இருந்தன.

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், நெஸ்ட்லே இந்தியா, பஜாஜ் பைனான்ஸ், டெக் மகேந்திரா, ஏசியன் பெயின்ட்ஸ், பாரதி ஏர்டெல், டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், டைட்டன் கம்பெனி, இன்போசிஸ், விப்ரோ, பஜாஜ் ஃபின்சர்வ், ஆக்ஸிஸ் பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க் பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x