Published : 21 Aug 2023 10:36 AM
Last Updated : 21 Aug 2023 10:36 AM

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை | சென்செக்ஸ் 23 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 56 புள்ளிகள் உயர்வடைந்து 65,005 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 19 புள்ளிகள் உயர்ந்து 19,329 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் வார முதல் நாள் வர்த்தகத்தை சற்றே ஏற்றத்துடன் தொடங்கின. காலை 10:03 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 23.30 புள்ளிகள் உயர்வடைந்து 64,971.96 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 4.30 புள்ளிகள் சரிந்து 19,314.45 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் நிலவும் கலவையான சூழல்களுக்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதிப்பங்குகள் ஏற்றம் லாபத்துக்கு வழிவகுத்தன.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பவர் கிரிடு கார்ப்பரேஷன், என்டிபிசி, டாடா மோட்டார்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், பாரதி ஏர்டெல், நெஸ்ட்லே இந்தியா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டிசிஎஸ், இன்போசிஸ், ஐடிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், டெக் மகேந்திரா, இன்டஸ்இன்ட் பேங்க், விப்ரோ, டைட்டன் கம்பெனி, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க், சன்பார்மா இன்டஸ்இன்ட், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எம் அண்ட் எம், ஹிந்துஸ்தான் யுனிலீவர், மாருதி சுசூகி, பஜாஜ் ஃபின்சர்வ், எல் அண்ட் டி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x