Published : 18 Aug 2023 10:33 AM
Last Updated : 18 Aug 2023 10:33 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 303 புள்ளிகள் சரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை சரிவுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 231 புள்ளிகள் சரிவடைந்து 64,919 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 67 புள்ளிகள் சரிந்து 19,298 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் வார இறுதி நாள் வர்த்தகத்தை சரிவுடன் தொடங்கின. காலை 10:00 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 303.23 புள்ளிகள் சரிவடைந்து 64,847.79 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 97.60 புள்ளிகள் சரிந்து 19,267.65 ஆக இருந்தது.

வட்டி விகித உயர்வு குறித்த அச்சம் காரணமாக உலகளாவிய சந்தைகளில் நிலவும் எதிர்மறை சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் வார இறுதி நாள் வர்த்தகத்தை வீழ்ச்சியுடனேயே தொடங்கின. தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதிப்பங்குகளின் சரிவு வீழ்ச்சிக்கு வழிவகுத்தன. பெரும்பாலன பங்குகள் சரிவில் இருந்தன.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எல் அண்ட் டி, ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ, டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் உயர்வில் இருந்தன.

டிசிஎஸ், விப்ரோ, டெக் மகேந்திரா, இன்போசிஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், நெஸ்ட்லே இந்தியா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஃபின்சர்வ், ஏசியன் பெயின்ட்ஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், டாடா ஸ்டீல், இன்டஸ்இன்ட் பேங்க், எம் அண்ட் எம், பாரதி ஏர்டெல், கோடாக் மகேந்திரா பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், மாருதி சுசூகி, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், ஐடிசி பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x