Published : 31 Jul 2023 06:29 PM
Last Updated : 31 Jul 2023 06:29 PM

சென்செக்ஸ் 367 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 367 புள்ளிகள் (0.56 சதவீதம்) உயர்வடைந்து 66,527 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 107 புள்ளிகள் (0.55 சதவீதம்) உயர்ந்து 19,753 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. என்றாலும் வர்த்தக நேரத்தின் போது சீரடையத் தொடங்கியது. காலை 10:17 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 78.42 புள்ளிகள் உயர்வடைந்து 66,238.62 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 11.60 புள்ளிகள் சரிந்து 19,657.65 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் சாதகமான சூழல், தகவல் தொழில்நுட்பம், உலோகம் மற்றும் வாகன பங்குகளின் ஏற்றத்தால் இரண்டு நாட்கள் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியப் பங்குச்சந்தைகள் ஜூலை மாதத்தை ஏற்றத்துடன் நிறைவு செய்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 367.47 புள்ளிகள் உயர்வடைந்து 66,527.67 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 107.75 புள்ளிகள் உயர்ந்து 19,753.80 ஆக இருந்தது

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை என்டிபிசி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், டெக் மகேந்திரா, டாாட ஸ்டீல், டிசிஎஸ், விப்ரோ, மாருதி சுசூகி, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்டஸ்இன்ட் பேங்க், எல் அண்ட் டி, இன்போசிஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டைட்டன் கம்பெனி, சன்பர்மா இன்டஸ்ட்ரீஸ், எம் அண்ட் எம், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், நெஸ்ட்லே இந்தியா, ஐசிஐசிஐ பேங்க், அல்ட்ரா டெக் சிமெணட்ஸ் பங்குகள் உயர்ந்திருந்தன.

பஜாஜ் ஃபைனான்ஸ், கோடாக் மகேந்திரா பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐடிசி, பாரதி ஏர்டெல், ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x