Published : 28 Jul 2023 10:30 AM
Last Updated : 28 Jul 2023 10:30 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 211 புள்ளிகள் சரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை சரிவுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 136 புள்ளிகள் சரிவடைந்து 66,130 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 35 புள்ளிகள் சரிந்து 19,624 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. காலை 10:04 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 211 புள்ளிகள் சரிவடைந்து 66,054.92 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 23.70 புள்ளிகள் சரிந்து 19,636.20 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் நிலவும் கலவையான சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் இறுதி நாள் வர்த்தகத்தை சரிவுடனேயே தொடங்கின. நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகள் சந்தைகளின் போக்கில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பவர் கிரிடு கார்ப்பரேஷன், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எம் அண்ட் எம், நெஸ்ட்லே இந்தியா, ஐடிசி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், பாரதி ஏர்டெல், ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் உயர்வில் இருந்தன.

ஐசிஐசிஐ பேங்க், டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், டைட்டன் கம்பெனி, மாருதி சுசூகி, அல்ட்ரா டெக் சிமெண்ட்,டெக் மகேந்திரா, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், இன்பேசிஸ், கோடாக் மகேந்திரா பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x