Published : 26 Jul 2023 11:09 AM
Last Updated : 26 Jul 2023 11:09 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்வு 

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் புதன்கிழமை ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 183 புள்ளிகள் உயர்வடைந்து 66,539 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 38 புள்ளிகள் உயர்ந்து 19,719 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:49 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 526.42 புள்ளிகள் உயர்வடைந்து 66,882.13 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி
134.60 புள்ளிகள் உயர்ந்து 19,815.20 ஆக இருந்தது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, ஹிந்துஸ்தான் யுனிலீவர் போன்ற இன்டக்ஸ் ஹெவிவெயிட் பங்குகளின் லாபத்தால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் தொடங்கின. பெரும்பாலான துறை பங்குகள் லாபத்தில் இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எல் அண்ட், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, டாடா மோட்டார்ஸ், பாரதி ஏர்டெல், கோடாக் மகேந்திரா பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், விப்ரோ, பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஆக்ஸிஸ் பேங்க், டெக் மகேந்திரா, பஜாஜ் ஃபின்சர்வ், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டிசிஎஸ், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க், டைட்டன் கம்பெனி, என்டிபிசி, நெஸ்ட்லே இந்தியா பங்குகள் ஏற்றத்தில் இருந்தன.

எம் அண்ட் எம், ஹெச்டிஎஃப்சி, ஏசியன் பெயின்ட்ஸ், டாடா ஸ்டீல், மாருதி சுசூகி, இன்டஸ்இன்ட் பேங்க் பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x