Published : 26 Jul 2023 07:48 AM
Last Updated : 26 Jul 2023 07:48 AM

7.4 கோடி பேர் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல்: அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: நிறுவனங்கள், தனிநபர்கள் என மொத்தமாக 7.4 கோடி பேர் 2022-23 நிதி ஆண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2021-22 நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 6.18 சதவீதம் அதிகம் ஆகும்.

நேரடி மற்றும் மறைமுக வரி வசூலை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இந்நிலையில், 2022-23 நிதிஆண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் (ஐடிஆர்) செய்தவர்களின் எண்ணிக்கை 6.18 சதவீதம் அதிகரித்துள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மின்னஞ்சல், குறுஞ்செய்தி “2022-23 நிதி ஆண்டில் மொத்த 7.4 கோடி ஐடிஆர் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 5.16 கோடி பேருக்கு வரி எதுவும் இல்லை. 2021-22 நிதி ஆண்டில் 6.94 கோடி, 2020-21 நிதி ஆண்டில் 6.72 கோடி, 2019-20 நிதி ஆண்டில் 6.47 கோடி விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஐடிஆர் விண்ணப்பிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் வரிதாரர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன”என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x