Published : 24 Jul 2023 10:53 AM
Last Updated : 24 Jul 2023 10:53 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 23 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை கடும் சரிவுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 101 புள்ளிகள் சரிவடைந்து 66,582 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 28 புள்ளிகள் சரிந்து 19,716 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. காலை 10:24 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 23.32 புள்ளிகள் உயர்வடைந்து 66,707.58 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி
13.80 புள்ளிகள் உயர்ந்து 19,758.80 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் கலவையான சூழல்களுக்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தை சரிவுடனேயே தொடங்கின. என்றாலும் வர்த்தக நேரத்தின் போது சீரடையத் தொடங்கியது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எம் அண்ட் எம், எல் அண்ட் டி, ஆக்ஸிஸ் பேங்க், டாடா மோட்டார்ஸ், இன்டஸ்இன்ட் பேங்க், இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ, பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐடிசி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், மாருதி சசூகி, அல்ட்ரா டெக் சிமெண்ட், என்டிபிசி பங்குகள் உயர்வில் இருந்தன.

கோடாக் மகேந்திரா பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், டெக் மகேந்திரா, பாரதி ஏர்டெல், நெஸ்ட்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x