Published : 20 Jul 2023 10:55 AM
Last Updated : 20 Jul 2023 10:55 AM

சென்செக்ஸ் 109 புள்ளிகள் சரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை சற்று சரிவுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 79 புள்ளிகள் சரிவடைந்து 67,018 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 24 புள்ளிகள் சரிந்து 19,808 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடனே தொடங்கியது.காலை 10:21 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 109.24புள்ளிகள் சரிவடைந்து 66,988.20 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 33.85 புள்ளிகள் சரிந்து 19,799.30 ஆக இருந்தது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் நிதிச்சேவையான ஜியோ பைனான்ஸியஸ் சர்வீஸின் சிறப்பு ப்ரீ ஓபன் மீது முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தியதால் இந்திய பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை வர்த்தகத்தை சரிவுடனேயே தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், இன்ட்ஸ்இன்ட் பேங்க், டாடா ஸ்டீல், பங்குகள் உயர்வில் இருந்தன.

இன்போசிஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், டிசிஎஸ், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபின்சர்வ், எம் அண்ட் எம், கோடாக் மகேந்திரா பேங்க், டைட்டன் கம்பெனி, நெஸ்ட்லே இந்தியா, டாடா மோட்டார்ஸ், விப்ரோ, ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி, டெக் மகேந்திரா, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், ஆக்ஸிஸ் பேங்க், மாருதி சுசூகி, என்டிபிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவர் , பாரதி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி பேங்க், பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஐசிஐசிஐ பேங்க் பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x