Published : 19 Jul 2023 10:45 AM
Last Updated : 19 Jul 2023 10:45 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 248 புள்ளிகள் உயர்வு 

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் புதன்கிழமையும் புதிய ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 263 புள்ளிகள் உயர்வடைந்து 67,058 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 67 புள்ளிகள் உயர்ந்து 19,817 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:26 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 248.89 புள்ளிகள் உயர்வடைந்து 67,044.03 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி
76.90 புள்ளிகள் உயர்ந்து 19,826.15 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் சாதகமான சூழல் மற்றும் நிறுவனங்களின் ஜூன் (முதல்) காலாண்டு அறிக்கைகளின் முடிவுகள் போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை புதிய உச்சத்துடனும், நேர்மறையான குறிப்புகளுடனும் தொடங்கின. பெரும்பாலான பங்குகள் ஏற்றத்தில் இருந்தன.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை என்டிபிசி, பவர்கிரிடு கார்ப்பரேஷன், இன்டஸ்இன்ட் பேங்க், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், பஜாஜ் பைனான்ஸ், கோடாக் மகேந்திரா பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டைட்டன் கம்பெனி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டைட்டன் கம்பெனி, டாடா மோட்டார்ஸ், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ், விப்ரோ, டாடா ஸ்டீல், ஆக்ஸிஸ் பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன.

ஏசியன் பெயின்ட்ஸ், எம் அண்ட் எம், மாருதி சுசூகி, நெஸ்ட்லே இந்தியா, டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், ஐடிசி பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x