Published : 19 Jul 2023 07:54 AM
Last Updated : 19 Jul 2023 07:54 AM

இ-சிகரெட்டுகளை விற்பனை செய்த 15 இணையதளங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

கோப்புப்படம்

புதுடெல்லி: இ-சிகரெட் விற்பனையில் ஈடுபட்டுவந்த 15 இணைய தளங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தியாவில் இ-சிகரெட்டுகளின் தயாரிப்பு, விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதி, விநியோகம், விளம்பரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும், சில இணைய தளங்கள் இ-சிகரெட் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், அவ்வாறு விற்பனையில் ஈடுபட்டுவந்த 15 இணையதளங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

“இந்தியாவில் இ-சிகரெட்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. உங்கள் இணையதளம் இ-சிகெரட் விற்பனை, விளம்பரங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்தச் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தும்படி உத்தரவிடுகிறோம்” என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோட்டீஸ் அனுப்பப்பட்ட தையடுத்து, 4 இணையதளங்கள் விற்பனையை நிறுத்தியுள்ளதாகவும் மற்ற நிறுவனங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதிலளிக்காத இணையதளங்கள் மீது சட்டரீதியான நடவ டிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-சிகரெட் மீதான தடையை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் கடிதம் எழுதியது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x