Published : 12 Jul 2023 06:57 PM
Last Updated : 12 Jul 2023 06:57 PM
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் புதன்கிழமை வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 223 புள்ளிகள் (0.34 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 65,393 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 55 புள்ளிகள் (0.28 சதவீதம்) வீழ்ந்து 19,384 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 89.55 புள்ளிகள் உயர்வடைந்து 65,707.39 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 1.85 புள்ளிகள் சரிந்து 19,437.55 ஆக இருந்தது.
ஹெச்சிஎல் டெக். மற்றும் டிசிஎஸ் ஆகியவைகளின் காலாண்டு அறிக்கைகள் காரணமாக ஐடி பங்குகள் விற்பனை அழுத்தத்துக்கு உள்ளாகின. இந்தியா மற்றும் அமெரிக்க சில்லறை பணவீக்க தரவுகளுக்கு முன்பாக முதலீட்டாளர்களின் லாபம் ஈட்டும் நோக்கம் இந்திய பங்குசந்தைகளின் மூன்று நாள் ஏற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து இன்று சரிவுடன் நிறைவடையச் செய்தது.
இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 223.94 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 65,393.90 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 55.10 புள்ளிகள் வீழ்ந்து 19,384.30 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை கோடாக் மகேந்திரா பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், டைட்டன் கம்பெனி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், நெஸ்ட்லே இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எம் அண்ட் எம் பங்குகள் உயர்வடைந்திருந்தன.
பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐடிசி, விப்ரோ, டெக் மகேந்திரா, ஐசிஐசிஐ போங்க், பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டிசிஎஸ், ஆக்ஸிஸ் பேங்க், பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்டஸ்இன்ட் பேங்க், மாருதி சுசூகி, எல் அண்ட் டி, என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி பேங்க், டாடா மோட்டார்ஸ், இன்போசிஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment