Published : 12 Jul 2023 10:54 AM
Last Updated : 12 Jul 2023 10:54 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 89 புள்ளிகள் உயர்வு

மும்பை: பங்குச்சந்தைகள் இன்று காலை 10:30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 89.55 புள்ளிகள் உயர்வடைந்து 65,707.39 ஆக இருந்தது.

இந்தியப் பங்குச்சந்தைகள் புதன்கிழமை ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 149 புள்ளிகள் உயர்வடைந்து 65,767 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 19,489 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 89.55 புள்ளிகள் உயர்வடைந்து 65,707.39 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 1.85 புள்ளிகள் சரிந்து 19,437.55 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் மந்தமான சூழல் நிலவிய போதிலும் இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. இருந்தபோதிலும் இந்தியா மற்றும் அமெரிக்க சில்லறை பணவீக்க தரவுகள், தகவல் தொழில்நுட்பத்துறை ஜாம்பாவன்களான ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ் -ன் முதல் காலாண்டு அறிக்கைகள் இன்று வெளியாக இருப்பது முதலீட்டாளர்களிடம் எச்சரிக்கை உணர்வைத் தூண்டியுள்ளது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி, கோட்க் மகேந்திரா பேங்க், டைட்டன் கம்பெனி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐடிசி பங்குகள் உயர்வில் இருந்தன.

அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், இன்போசிஸ், இன்டஸ்இன்ட் பேங்க், எம் அண்ட் எம், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா ஸ்டீல், ஏசியன் பெயின்ட்ஸ், டெக் மகேந்திரா, பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா மோட்டார்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், டிசிஎஸ், எல் அண்ட் டி, ஐசிஐசிஐ பேங்க், விப்ரோ, மாருதி சுசூகி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், நெஸ்ட்லே இந்தியா பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x