Published : 11 Jul 2023 06:59 PM
Last Updated : 11 Jul 2023 06:59 PM

சென்செக்ஸ் 273 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 273 புள்ளிகள் (0.42 சதவீதம்) உயர்வடைந்து 65,617 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 83 புள்ளிகள் (0.43 சதவீதம்) உயர்ந்து 19,439 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:36 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 397.47 புள்ளிகள் உயர்வடைந்து 65,741.64 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 119.45 புள்ளிகள் உயர்ந்து 19,475.35 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் சாதகமான சூழல், வாகனம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பங்குகளின் உயர்வு காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்தில் நிறைவு செய்தன. ரிலையன்ஸ் பங்குகளும் சந்தையின் உயர்விற்கு வழிவகுத்தது. அமெரிக்க பணவீக்க விபரம் நாளை வெளியாக உள்ள நிலையில் வர்த்தக நேரத்தின் இறுதியில் நிதி பங்குகள் அழுத்தத்துக்கு உள்ளாகின. வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் இன்றைய நாளின் உச்சமாக 65,871 வரை உயர்ந்தது.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 273.67 புள்ளிகள் உயர்வடைந்து 65,617.84 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 83.50 புள்ளிகள் உயர்ந்து 19,439.40 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், ஐடிசி, இன்போசிஸ், ஏசியன் பெயின்ட்ஸ், நெஸ்ட்லே இந்தியா, டைட்டன் கம்பெனி, டெக் மகேந்திரா, எம் அண்ட் எம், பவர் கிரிடு கார்ப்பரேஷன், எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், பாரதி ஏர்டெல், விப்ரோ, இன்டஸ்இன்ட் பேங்க், என்டிபிசி, கோடாக் மகேந்திரா பேங்க் பங்குகள் உயர்வடைந்திருந்தன.

பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், ஐசிஐசிஐ பேங்க், டாடா ஸ்டீல் அல்ட்ரா டெக் சிமெண்ட், டிசிஎஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x