Published : 06 Jul 2023 10:55 AM
Last Updated : 06 Jul 2023 10:55 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 132 புள்ளிகள் உயர்வு 

மும்பை: பங்குசந்தையில் இன்று காலை 10:18 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 132.37 புள்ளிகள் உயர்வடைந்து 65,578.41 ஆக இருந்தது.

இந்தியப் பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை சற்றே சரிவுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 35 புள்ளிகள் சரிவடைந்து 65,410 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 7 புள்ளிகள் சரிந்து 19,390 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று காலை சற்றே சரிவுடன் தொடங்கிய போதிலும் பின்னர் ஏற்றம் கண்டது. காலை 10:18 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 132.37 புள்ளிகள் உயர்வடைந்து 65,578.41 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 27.10 புள்ளிகள் உயர்ந்து 19,425.60 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் நிலவிய எதிர்மறை சூழல்களுக்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை சற்றே சரிவுடன் தொடங்கின. அமெரிக்கா, சீனாவுக்கு இடையே அதிகரித்து வரும் வர்த்தக மோதல்கள், அமெரிக்க பெடரல் வங்கி தனது வட்டிவிகித கொள்கையை மேலும் அதிகரிக்கலாம் என்ற தகவல்கள் போன்றவை ஆசிய முதலீட்டாளர்களிடம் அச்ச உணர்வினைத் தூண்டியுள்ளன.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், நெஸ்ட்லே இந்தியா, பவர்கிரிடு கார்ப்பரேஷன், ஆக்ஸிஸ் பேங்க், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், எல் அண்ட் டி, கோடாக் மகேந்திரா பேங்க், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், ஆசியன் பெயின்ட்ஸ், பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் பின்சர்வ், விப்ரோ, டிசிஎஸ், எம் அண்ட் எம், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்குகள் ஏற்றத்தில் இருந்தன.

இன்டஸ்இன்ட் பேங்க், டாடா ஸ்டீல், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், மாருதி சுசூகி, டெக் மகேந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்டிஎஃப்சி பேங்க், இன்போசிஸ், டைட்டன் கம்பெனி பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x