Published : 05 Jul 2023 10:35 AM
Last Updated : 05 Jul 2023 10:35 AM

பங்குச்சந்தை |  சென்செக்ஸ் 59 புள்ளிகள் சரிவு

மும்பை: பங்குசந்தையில்காலை 09:58 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 59.87 புள்ளிகள் சரிவடைந்து 65419.18 ஆக இருந்தது.

இந்தியப் பங்குச்சந்தைகள் புதன்கிழமை சரிவுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 91 புள்ளிகள் சரிவடைந்து 65,387 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 23 புள்ளிகள் சரிந்து 19,365 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று காலை சரிவுடனேயே தொடங்கியது. காலை 09:58 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 59.87 புள்ளிகள் சரிவடைந்து 65,419.18 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 9.95 புள்ளிகள் சரிந்து 19,379.05 ஆக இருந்தது.

ஜூன் மாதத்திற்கான சீனாவுடைய சேவைகளின் பிஎம்ஐ வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ஆசிய சந்தைகளில் நிலவும் பாதகமான சூழல்களுக்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை சரிவுடனேயே தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை இன்டஸ்இன்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஆசியன் பெயின்ட்ஸ், எல் அண்ட் டி, மாருதி சுசூகி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் யுனிலீவர், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், நெஸ்ட்லே இந்தியா, ஐடிசி, என்டிபிசி, டெக் மகேந்திரா, பாரதி ஏர்டெல், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ் பங்குகள் உயர்வில் இருந்தன.

ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, விப்ரோ, பாரதி ஏர்டெல், கோடக் மகேந்திரா பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், இன்போசிஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா மோட்டர்ஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x